ரசவாதத்தின் உண்மை


இத்தளத்தின் நோக்கம் :

 உலகில் தேடல் அதிகம் உண்டு. அவை இன்றும் தொடர்கின்றது என்றால் தங்கத்தை செயற்கையாக செய்துவிட வேண்டும் என்ற எண்ணம். நல்ல விஷயம்தான் ஆனால் தேடவேண்டியதை சரியாக தேடவேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இந்த தளத்தின் மூலம் ரசவாதம் என்ற பெயரில் நடக்கும்  ஏமாற்று வேலைகளை வரிசைபடுத்த விரும்புகிறேன். வேலை இல்லாத வாலிபர்களை முட்டாளாக்கும் இந்த  திருட்டு வேலைகளை வெளிபடுத்தும் தளமாக இது  இருக்க வேண்டும் என்று நான்  நம்பிக்கை கொள்கிறேன்.

ரசவாதம் என்ற பெயர் :

ரசவாதத்தை தங்கவாதம் என்றோ, வெள்ளிவாதம் என்றோ, செம்புவாதம் என்றோ அழைப்பதில்லை. மாறாக ரசவாதம் என்றே அழைக்கிறோம். ரசவாதம் என்ற வார்த்தை பாதரசம் என்ற தனிமத்தின்  அடிப்படையில் இருந்து உருவானது. ஏன்னெனில் ரசவாதத்தின் தொடக்கம்  பாதரசம் என்ற தனிமத்தில் இருந்து உருவாகிறது. பாதரசத்தின் அணு எண் 80 ஆகும். தங்கத்தின் அணு எண் 79 ஆகும். பாதரசத்தில் இருந்து ஒரு எலக்ட்ரான்  எண்ணிக்கை குறைந்தால் தங்கத்தின் அணு எண் வந்துவிடும் என்பதாலே. ரசவாதத்தில் முதல் முயற்சி பாதரசத்தில் இருந்து தங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதனால் ரசவாதம் என்ற பெயர் பாதரசத்தில் இருந்து தோன்றியது.

ரசவாதம் பற்றிய புத்தகங்கள் :

ரசவாதம் பற்றி அநேக புத்தகங்கள் வெளிவந்து உள்ளது. சரி, அந்த புத்தகங்களை எழுதியவர்கள் என ரசவாதிகளா? அல்லது, ரசவாதிகளிடம் இருந்து ரசவாத பயிற்சி ஏதும் பெற்றார்களா? ஏதாவது தங்கத்தை செம்பில் இருந்தோ, அல்லது வெள்ளியில் இருந்தோ உருவாக்கினார்களா? எதுவுமே கிடையாது. மொத்தத்தில் இவர்கள் ஆணியை அடிப்பதும் இல்லை, ஆணியை புடுங்குவதும் இல்லை. அப்படிஎன்றால் இவர்கள் இவ்வளவு ஞானம் உள்ள புத்தகங்களை எப்படி எழுதுவார்கள்? எல்லாமே காப்பியடித்து எழுதுவதுதான் இவர்களின்  வேலை.

முயற்சிகளும் முட்டாள்தனங்களும் :
 சினிமா யாரையும் ஏமாற்றுவதில்லை. ஆனால் சினிமாவை பார்த்து தங்களை தாங்களே ஏமாற்றி கொண்ட முட்டாள்கள் உண்டு. 7ஆம் அறிவு படம்பார்த்த பல இளைஞர்களுக்கு 8ஆம் அறிவு வேலை  செய்ய ஆரம்பித்து விட்டது. பற்றாக்குறைக்கு அயன் மேன், சூப்பர் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், இன்னும் பல ஹாலிவூட் ஹீரோக்களும் அவ்வப்போது வலம் வருகிறார்கள். இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால். இந்த சூப்பர் ஹீரோக்களுக்கும் ரசமணிக்கும் ஒரு  தொடர்ப்பு உண்டு. இவர்கள் செய்கின்ற அத்தனை சாகசங்களும் ரசமணி இருந்தால் செய்யமுடியும் என்ற முட்டாள்தனமான செய்தி பரவி உள்ளது. அதாவது நோகாமல் னெங்கு திண்ணலாம் என்றுதான். நீங்கள் "ரசமணியின் பயன்கள்" என்று  கூகிள் செய்து பார்த்தால் உங்களுக்கே புரியும். .அதுமட்டுமல்ல..

ரசவாதம் உண்மை கதை - ஏமாந்த கதை:





தொடரும்....

No comments: